சிவரூபன் சர்வேஸ்வரி

அகதி நாம்பெற்ற வரமா

அற நலவுருவெடுத்து – நாம்
அவனியிலே பிறந்து வளர்ந்தும்
நிலமதிர நிற்கவைக்கும்-அகதி
எனும் நிலை தானே

தெளிந்த நல் நிலவு போன்று
தேன்பாயுமருவி போன்று
விளைந்த நல் மணிகள் போன்று
முதிர்ந்த நிலை வந்தாலும்
அகதியென்று
அங்காடி போல் வந்து நிற்கும்

ஒன்றைப் பெறவேண்டுமென
ஒன்றையிழந்து நிற்கையில்
அகதி என்ற பெயருடன்
அலைபாய்ந்து நின்றிடுவோம்
அன்று இட்ட சாபம்-இன்று
இன்று பெற்றோம் வரமாய்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading