இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

வலைப் பூ-

என் ஆசை மச்சான்-நீ
வலைகொண்டு வருவாயென்று-யான்
சிலையாக நிற்கின்றேன்
கலையாக நீ வந்தாய்- நானும்
காதல் வலை வீசிநின்றேன்

வேலைக்குப் போகையிலே – உனக்கு
வீண் பேச்சுத் தேவையில்லை
வலை போட்டு வந்தால்த்தான்-
சுளையாகப் பணம் வருமே

கடலலை அடிக்கிறது- அங்கே
காற்றும் பலமாய் வீசுகின்றது
நடுக்கடலுக்குப் போகவேண்டும்
நான் வாரேன் நாயகியே

என் மனமும் அலை போல
குமுறுவது புரியலையோ
வலை வீசி மீனைப்பிடி- உன்
வலைப்பூவுக்குள் என்னைப்பிடி

பாசவலை போட்டதாலே-என்
நேசவலை நீ யானாய்
மோசவலை போடாமல்- என்
மோகினியே விலகிநில்.

கலையாத என்னகத்தில் நிலையாக நிற்பாய் மச்சான்
பாலைவனமாய் நிற்கின்றேன். சோலை
வனமாய் வருவாய் மச்சாள்
வாலைக்குமரியடி கண்னே -என்னை
வளைப்பூக்குள் மடக்கிய சிறுக்கியடி

கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி..✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading