முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

வலைப் பூ-

என் ஆசை மச்சான்-நீ
வலைகொண்டு வருவாயென்று-யான்
சிலையாக நிற்கின்றேன்
கலையாக நீ வந்தாய்- நானும்
காதல் வலை வீசிநின்றேன்

வேலைக்குப் போகையிலே – உனக்கு
வீண் பேச்சுத் தேவையில்லை
வலை போட்டு வந்தால்த்தான்-
சுளையாகப் பணம் வருமே

கடலலை அடிக்கிறது- அங்கே
காற்றும் பலமாய் வீசுகின்றது
நடுக்கடலுக்குப் போகவேண்டும்
நான் வாரேன் நாயகியே

என் மனமும் அலை போல
குமுறுவது புரியலையோ
வலை வீசி மீனைப்பிடி- உன்
வலைப்பூவுக்குள் என்னைப்பிடி

பாசவலை போட்டதாலே-என்
நேசவலை நீ யானாய்
மோசவலை போடாமல்- என்
மோகினியே விலகிநில்.

கலையாத என்னகத்தில் நிலையாக நிற்பாய் மச்சான்
பாலைவனமாய் நிற்கின்றேன். சோலை
வனமாய் வருவாய் மச்சாள்
வாலைக்குமரியடி கண்னே -என்னை
வளைப்பூக்குள் மடக்கிய சிறுக்கியடி

கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி..✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading