இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி.

வீணர்கள் நிலை

குருவிக்கூட்டுக்கு கல்லெறிந்து பார்
குருவிகள் பறந்து விடும் -ஆனால்
நீ குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்து பார்
குளவிகள் கொட்ட வரும்

குணமறிந்து செயலற்ப்பட்டால் -ஒரு
குற்றமும் தெரியாது.
குறுக்கு வழியில் சாதிப்பேனென்று
கொப்பரம் தட்டி நின்றால்

தலை குனிந்து போகும் நிலையும்
வெகு தூரமில்லை.
நல்லவன் போன்று நப்பாசை போட்டு
வேடம் கட்டும் சிலர்- இன்று
நாடெல்லாம் பரவி நின்று
நர்த்தன மாடுகின்றனர்.

உண்மையாய் வாழ்கின்றோம்- என்று
ஓர் முழக்கம்
ஊர் வம்பை வேண்டி- அங்கு
ஒர் பதட்டம்
நல்லவரையும் பந்தாடும் கூட்டம்
நமனுக்குமஞ்சோமென ஓட்டம்

கல்நெஞ்சுக்காரர் செய்யுமாட்டம்
கருணையென்பது இல்லாத தேரோட்டம்
பூவையவள் பாரினிலே
பூகம்பமாய் நின்றாள்
பூம்புகாரா கண்ணகி போன்று
வீம்புகள் செய்யும் வீணர்
கூட்டத்தை
வீர மகளாய்த் தானெழுந்து
நீதியையுரைத்தாலும்-
வீணர்கள் நிலை……..?????

கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading