தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

வழிகாட்டிகள்

மலர்வுடன் மலராகி- நல்ல
மணம் பரப்பி நிற்பதற்கு
அறிவின் திறவுகோலை- நல்ல
அறமாக வழிகாட்டி நின்ற- நற்
குருவே. நீவீர் வாழி, வாழி

மாதா, பிதா, குரு தெய்வமென்று
மானிலத்தில் எழுதி வைத்தாள் ஔவையுமே
வற்றிய குளத்தினிலே பறவைகள்
தங்காது
வரண்ட பிரதேசத்திலே
புற்களும் முளைக்காது
விளைபயிருக்கு நீரில்லை யென்றால்
பயிர்களும் செழிக்காது
கற்று வழியேக , குருமாரும் இல்லை
எனில், கற்கையுமிருக்காது

அகரத்தையும் முகரத்தையும்
அழகாக அறிவூட்டி
அன்றாடக் கடமைகளில்
நில்லாது சேவை செய்து
கல்வியெனும் படகேறி
கரையேக வைப்பவரே
விண்மீனாய் திகழவைக்கும் எம்
ஆசிரியர்களே நீவீர் வாழி,வாழி

வாழ வழியும் வழமோடு நற்சேவையும்
வண்ண விளக்காய் வரம் போடும் கல்வியும்
கேடு இல் விழிச்செல்வம் கல்வி
ஒருவர்க்கு மாடு அல்ல
மற்றையவை- என்று
கூறிநின்று வழிகாட்டியவர்களே
நீவீர் வாழி, வாழி

– கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading