” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

அலை, ஓசை

அலை ,அலையாய் எழுகிறதே
ஆனந்தப் பரவசம் அடைகிறதே
கலை,கலையாய் விரிகின்றதே
கவிஞரின் கலைச்சங்கம் இசைக்கின்றதே

விளைந்த நற் பொன்மணிகள்
மலை,மலையாய் குவிகின்றதே
சுளை சுளையாய் சொற்பதங்கள்
சுகந்தவலை வீசுகின்றதே

கடலலையில் அலையோசை காதினிலே
சங்கோசைபோல் கூவி நின்றதுவே
மழைத்துளியின் ஓசை மானிலத்தில்
மலர்வுடனே அலையோசையில் எழுகின்றதே
தலை தலையாய் தமிழ் மணமும்
பரப்புவதும் தனியோசை
நிலை, நிலையாய் நிற்பதற்கு
பாமுகத்தில் பல ஓசை

சிலை வடிக்கும் ஆசாரி- அங்கே
கீறுவதும் அலையோசை
கடவுள் தந்த சொத்தென்று
கனிந்து நிற்பதேஅலையோசை

அலையோசை இல்லையென்றால்
வலையத்தளம் இங்கில்லை
அலாரம் ஒன்றை வைத்துவிட்டு
அயராமல் எழும்புவதும் தனியோசை

அலையோசை அகத்தினிலே
ஆடுதுபார் தினம்தினமே
ஆகாய வான்பரப்பில் அலை, அலையாக
முகில்களின் ஓட்டத்திலும் அலையோசை தானே,
கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி.

Nada Mohan
Author: Nada Mohan