19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
சிவரூபன் சர்வேஸ்வரி.
பெட்டியில் பொலியட்டும்..’
குளிர் காற்று சில்லென வீசியது
குளிர்மை கண்டவுடன் மெல்ல நடங்கியது
குகையாய் இருட்டு வானம் கறுத்தது
குமரி உறுமலில் சில மழைத்துளி வீழ்ந்தது
சந்திரோதயம் சாட்சியாய் நின்றது
இரவியங்கே சிவப்பாக தெரித்து மறைந்தது
சுரபி நிலைக்கு வானம் இருண்டது
பரவி மழைத்துளி பட்டுப்போல் தெறித்தது
மருவிநின்றந்தக் காட்சியைப் பார்த்தேன்
மனங்குளிர இறைவனை வணங்கித் துதித்தேன்
. தண்ணீர் பஞ்சம் மாறி போகட்டும்
தரணியில் புற்களும் செழித்து வளரட்டும்.
புழுதிப்படலம் வீசிநின்ற விடத்தே-
பூ மழை தூவி வசந்தம் வீசட்டும்
பாலைவனம் போலிருந்த இடங்கள்
பசும் சோலையாய் மாறி பூத்துக் குலுங்கட்டும்
கால நிலைகள் கனிவாய் மாறட்டும்,
கனிந்து மனங்கள் பேரின்பமடையட்டும்
கஷ்டம் நீங்க நெற் பயிர்களும் வளரட்டும்
கனக மணிகள் பெட்டியில் பொலியட்டும்,
— கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி.
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...