மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

ஒளியின்றி ஒளிர்வெங்கு
-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<

உள்ளத்தில் ஒளியின்றி ஊனங்கள் தான் சமந்து
பள்ளத்தில் பள்ளத்துள் வீழ்ந்தவொளி பாதையைக் காட்டிடுமா

வள்ளத்திலேறி நின்று வெளிச்சக்கூட்டைப் பார்த்தேன்
தெள்ளத்தெரிந்த வொளிதிசைகாட்டாமல் தணிந்ததுவே

ஒளியின்றிப்போனதாலே எந்தன் பாதை திசைமாறி நின்றதே
வழிப்பாதை தெரியுமென வள்ளத்தில் தானிருந்தேன்
துளிர்விடும் நிலையுமில்லை
ஒளிவுபெறவொளியுமில்லை
மிளிர்வுடன் நின்றாலும்ஒளியின்றி ஒளிர்வெங்கே

பறையொன்று முழங்குகின்றது

பரமன் வாசலிலே ஒளித்தீபம் தெரிகின்றதே

தெளிந்த வென்சிந்தையிலே தெரியாத புதிராச்சே
சீர் பெறும் சீமையிலே சாந்தி நிலையோங்கிடவே

ஒளியின்றி ஒளிர் வெங்கு ஒளித்தீபம் ஏற்றிடுவோம்…..

கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading