தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

ஆறுதலே வானம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ

அன்பினிலே பாத்தி கட்டி அவசரமாக நடை பயின்றோம் //

இன்பமுடன் பேசியும் இகமதில் மகிழ்ந்தோம் நாமும்//

இனிமை பொங்கும் நாட்கள் எல்லாம் இருண்ட வானம் ஆகியதே//

வெள்ளை மனமும் உந்தனுக்கு கள்ள இன்றிக் கதைத்தாயே //

சொல்ல மறந்த கதைகள் எத்தனை சொல்லாது எங்கு போனாய் //

எப்படிச் சொல்வேன் எனதுயிரே கேட்பாய் //

செங்கதிராக என்னோடு ஒளிவீசியும் நடப்பாய் என்றே பெரும் கனவு //

காலம் போட்ட கோலம் என்னடா கவலையில் மூழ்கவும் விட்டதே //

வானத்து விண் மீனுக்கு வந்ததோ சோதனை//
சாதனை இன்றியே சுரம் எப்படி
அணைந்தும் போனதே

பட்டமரம் துளிர்க்குமா, பரிசமும் போடலாமா ஏலம் போட முடியுமா //

ஆறுதலே வானமா அணங்குவின் எண்ணமும் வீணா //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan