சிவரூபன் சர்வேஸ்வரி

ஆறுதலே வானம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ

அன்பினிலே பாத்தி கட்டி அவசரமாக நடை பயின்றோம் //

இன்பமுடன் பேசியும் இகமதில் மகிழ்ந்தோம் நாமும்//

இனிமை பொங்கும் நாட்கள் எல்லாம் இருண்ட வானம் ஆகியதே//

வெள்ளை மனமும் உந்தனுக்கு கள்ள இன்றிக் கதைத்தாயே //

சொல்ல மறந்த கதைகள் எத்தனை சொல்லாது எங்கு போனாய் //

எப்படிச் சொல்வேன் எனதுயிரே கேட்பாய் //

செங்கதிராக என்னோடு ஒளிவீசியும் நடப்பாய் என்றே பெரும் கனவு //

காலம் போட்ட கோலம் என்னடா கவலையில் மூழ்கவும் விட்டதே //

வானத்து விண் மீனுக்கு வந்ததோ சோதனை//
சாதனை இன்றியே சுரம் எப்படி
அணைந்தும் போனதே

பட்டமரம் துளிர்க்குமா, பரிசமும் போடலாமா ஏலம் போட முடியுமா //

ஆறுதலே வானமா அணங்குவின் எண்ணமும் வீணா //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading