” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

ஆறுதலே வானம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ

அன்பினிலே பாத்தி கட்டி அவசரமாக நடை பயின்றோம் //

இன்பமுடன் பேசியும் இகமதில் மகிழ்ந்தோம் நாமும்//

இனிமை பொங்கும் நாட்கள் எல்லாம் இருண்ட வானம் ஆகியதே//

வெள்ளை மனமும் உந்தனுக்கு கள்ள இன்றிக் கதைத்தாயே //

சொல்ல மறந்த கதைகள் எத்தனை சொல்லாது எங்கு போனாய் //

எப்படிச் சொல்வேன் எனதுயிரே கேட்பாய் //

செங்கதிராக என்னோடு ஒளிவீசியும் நடப்பாய் என்றே பெரும் கனவு //

காலம் போட்ட கோலம் என்னடா கவலையில் மூழ்கவும் விட்டதே //

வானத்து விண் மீனுக்கு வந்ததோ சோதனை//
சாதனை இன்றியே சுரம் எப்படி
அணைந்தும் போனதே

பட்டமரம் துளிர்க்குமா, பரிசமும் போடலாமா ஏலம் போட முடியுமா //

ஆறுதலே வானமா அணங்குவின் எண்ணமும் வீணா //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan