மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

காவியம் படைப்போம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

நாளுமே நன்னெறி கற்றுமே நிற்போம் //
நாட்டிலே நன்மைகள் செய்துமே வருவோம் //
நல்லது தீயது அறிந்துமே கொள்வோம் //
நாளைய சந்ததிக்கு நல்வழியும் காட்டுவோம் //

வெற்றியும் தோல்வியும் வருவது சகயம் //
வெஞ்சினம் இல்லாத நெஞ்சினைப் பெறுவோம் //
வெட்டியாய் திரிவதை விட்டுமே நிற்ப்போம் //

வேளையும் இதுதான் ஒன்றாக இணைவோம் //

கவலையும் இன்றியே காப்பாய் கண்ணியம் //
கருத்து மோதலின்றியே ஏற்ப்பாய் சமாதானம் //

கடமையும் ஓங்கிடப் பாதையும் பார்ப்பாய் //
காலத்தில் நீயும் காவியம் படைப்பாய் //

ஆதலினால் காதல் செய்வீர் வாராய் //
ஆகாயம் பூமியும் பொறுமையின் சிகரம் //
ஆணவம் இன்றியே அகிலத்தை ஆழ்வாய் //

ஆணித்தரமான அறத்தையும் அகத்தினில் கொள்வாய் //
ஆனந்த கீதமும் இசைக்கும் நாட்டிலே //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading