” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

ஈரம்
ஃஃஃஃ

ஈரமில்லாத மனமுமுண்டோ ஈகையில்லாத குணமுமுண்டோ //
வாகைசூடாத மனிதமுண்டோ வாழநினைக்காத இதயமுண்டோ//
பாதைதெரியாமல் பயணமுண்டோ பண்புதெரியாத நடையுமுண்டோ //

உண்மைதெரியாமல் நடப்பதுண்டோ உரிமைதனை மறப்பதுண்டோ //

தொன்மையை மறக்கும் நிலையுமுண்டோ //
தோல்வியைக் கண்டும் அச்சமுண்டோ கேளாய் //
உயர்வாயெழுவாய் ஊக்கம்கொண்டே பகர்வாயென்றும் பாசத்துடன் //
இயல்பாய் இசைவாய் ஈரமும் சுட்டிடவே //

செயலாய் செம்மையாய் செங்கதிராய் இலங்கிடவே //

நயமாய் நன்மையை நயந்திடவே என்றும் //
சுயமாய் தோன்றட்டும் சுதந்திரம் உனக்கும் //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan