நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

(திருத்தம் ) நட்பென்றாலே 30.07.2026

நட்பென்றாலே (772 )செல்வி நித்தியானந்தன் அன்பு அரவணைப்பு என்றும் கைகொடுப்பு ஆபத்தில் அறிந்து துணையாகும் சிறப்பு அகிலத்தில் நட்பு நல்லதொரு...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

ஈரம்
ஃஃஃஃ

ஈரமில்லாத மனமுமுண்டோ ஈகையில்லாத குணமுமுண்டோ //
வாகைசூடாத மனிதமுண்டோ வாழநினைக்காத இதயமுண்டோ//
பாதைதெரியாமல் பயணமுண்டோ பண்புதெரியாத நடையுமுண்டோ //

உண்மைதெரியாமல் நடப்பதுண்டோ உரிமைதனை மறப்பதுண்டோ //

தொன்மையை மறக்கும் நிலையுமுண்டோ //
தோல்வியைக் கண்டும் அச்சமுண்டோ கேளாய் //
உயர்வாயெழுவாய் ஊக்கம்கொண்டே பகர்வாயென்றும் பாசத்துடன் //
இயல்பாய் இசைவாய் ஈரமும் சுட்டிடவே //

செயலாய் செம்மையாய் செங்கதிராய் இலங்கிடவே //

நயமாய் நன்மையை நயந்திடவே என்றும் //
சுயமாய் தோன்றட்டும் சுதந்திரம் உனக்கும் //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan