” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

இதயம்
ஃஃஃஃஃஃ

இதயமே என் இதயமே எங்கே போகின்றாய் //
இகமதில் என் எண்ணங்களே எங்கே போகின்றாய் //
மனசுக்குள் மத்தாப்பூ விரிந்து பூக்குமே //
மெளனமே நீயுமோ என்னைக் கொல்கின்றாய் //
சிரிப்பதும் அழுவதும் உன்னெஞ்சும் அல்லவா //
ஆற்றிட வேண்டுமே அறிவால் நீயென்றும் //
மாற்றியும் வைக்கின்றார் இதயம் பார்புள்ள //
மறந்துமே கவலையை தூக்கியெறி புள்ள //
நினைப்பதும் மறப்பதும் இதயம் தான்புள்ள //
ஈனத்தை மறந்துநீ இயல்பாய் எழும்புவாய் //

பூட்டிய கூட்டுக்குள் ஆவி துடிக்குதே //
போனால் வந்திடுமா புரிய வேண்டுமே //

ஏற்றிய தீபத்திலே ஒளியும் மிளிருமே //
காட்டிய பாதையிலே கால்கள் செல்லுமே //
கருணையை நினைத்துமே கடமை செல்லுமே //
காலம் போற்ற வாழ்வாய்யென்றால் இதயம் வாழுமே //

சிவருபன் சர்வேஸ்வரி
✍✍🌸🌸

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading