சிவரூபன் சர்வேஸ்வரி

மாசி
ஃஃஃஃ

மாசிமாதம் தான் கொட்டும் மேளதாளம்தான்//
மூசிப் பொழியுமே மோகம் தீரவே //
மேனியும் நடுங்குமே பல்லும் கிட்டுமே//
ஆராவாரம்தானே மாசிபிறந்ததும்//
பனிமழையில் பாரும் ஒருதனியே கேளாய் //
விரியும் மலர்கள் நறுமணம் வீசவும் //
கொடிகளும் ஏறும் கோவில்கள் பலதும்//
கொட்டாட்டங்களும் குமுதமாகப் பரவிடும் //
மனதிலே மாசியும் தூசியும் துடைக்கும் //
வளர்மதியாய் வரவுகளும் வந்து குவியும் //
நெல்மணிகளும் குவியும் நிம்மதியும் பிறக்கும் //
சிவன் இராத்திரியும் சிறப்பாக நடக்கும் //
ஆதிமுதல்வனின் கருணையும் பெறவே பேருகைவருமே //

மங்களத்தின் அடையாளம் மணம்பரப்பி வருவதுதான் மாசி //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 24-06-2025 வண்ணப் பெண்ணவளாய் வாஞ்சையோடு உலாவருவாள் குடும்பமென அர்ப்பணித்து குலவிளக்காய் சுடர்விட்டாள் வாழ்நாள் முழுதும் உழைத்து வானம்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading