சிவரூபன் சர்வேஸ்வரி

மாசி
ஃஃஃஃ

மாசிமாதம் தான் கொட்டும் மேளதாளம்தான்//
மூசிப் பொழியுமே மோகம் தீரவே //
மேனியும் நடுங்குமே பல்லும் கிட்டுமே//
ஆராவாரம்தானே மாசிபிறந்ததும்//
பனிமழையில் பாரும் ஒருதனியே கேளாய் //
விரியும் மலர்கள் நறுமணம் வீசவும் //
கொடிகளும் ஏறும் கோவில்கள் பலதும்//
கொட்டாட்டங்களும் குமுதமாகப் பரவிடும் //
மனதிலே மாசியும் தூசியும் துடைக்கும் //
வளர்மதியாய் வரவுகளும் வந்து குவியும் //
நெல்மணிகளும் குவியும் நிம்மதியும் பிறக்கும் //
சிவன் இராத்திரியும் சிறப்பாக நடக்கும் //
ஆதிமுதல்வனின் கருணையும் பெறவே பேருகைவருமே //

மங்களத்தின் அடையாளம் மணம்பரப்பி வருவதுதான் மாசி //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading