” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம் _173

“இதயம்”

இதயமே என்
இதயமே
எம்மை இயங்க வைக்கும் இதயமே
முச்சுக்கு நீயே முன்னுரை
பேச்சுக்கு நீயே பெருந்தகை!

ஒரு நிமிடம்
நீ துடிக்க மறுத்தால்
நான் இல்லை
உனை நான்
கவனிக்க மறுத்தால் நீ இல்லை!

உன் சேவை
பெரும் சேவை
பெருமிதம்
கொள்கிறேன் பேர் அன்புடன்!

இதயத்தின்
வழியாக
இரத்த ஓட்டத்தை
ஓழுங்கு படுத்தி
இதய வால்புக்கு
முக்கிய பங்கு இங்கு!

உணவை மருந்தாக்கு
உடல் பயிற்சியை விருந்தாக்கு
உடல் எடையை குறைத்திடு
ஊக்கத்தை கைவிடாதே!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
15.12.24

Nada Mohan
Author: Nada Mohan