மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்_87

“கனவு மெய்பட வேண்டும்”

தாய்மொழி நேசித்து
தனிதாய்மண்ணை சுவாசித்து
தமிழ்மக்களை யாசித்த
சத்தியவான்கள் நித்திய சிலிகள் கனவு மெய்பட வேண்டும்!

பேரிலே அங்கங்களை இளந்து
குண்டு மழையில் நனைந்து
குருதி சிந்தி
கூனி குறுகி
கூட்டாக சரணடைந்து
கூட்டாக காணமல் ஆக்கபட்டோர்
கைகளில் கிடைக்க கனவு மெய்பட வேண்டும்!

பிள்ளை செல்வங்களுக்காக
பட்டினி கிடந்து
பசியால் மெலிந்து
தெருவீதியில் இருந்து
விம்மி அழுது
ஏங்கி தவிக்கும்
உறவுகளின்
கனவு மெய்பட வேண்டும்!

தாய்யை இளந்து
தந்தையை பறிகொடுத்து
சொந்தங்களை பிரிந்து வாழும்
குழந்தைகளின்
கனவு மெய்பட வேண்டும்!

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading