” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_121

*அலை* *ஓசை* நந்திகடல் அலையின்
நாதம் மிக்க ஓசை
நானிலம் சூழ்ந்த
நாணல் புல்லின் ஓசை

மீனினம் பாடும்
நண்டுகள் கரை ஒதுங்கும்
றாலினம் துள்ளி குதிக்கும் ஓசை

சுடச்சுட அப்பா கடல் உணவு வேண்டி வருவார்
காத்திருந்து பாத்திருந்து
கறி கொதிக்கும் ஓசையுடன்
உண்டு மகிழ்ந்து அம்மாவுடன் உறவாடிய நாட்கள்

ஆச்சி மாவின் நிணலில் இருந்து
கடல் காற்று வேண்டி அலை ஓசை காதில் ஒலிக்க பலா இலையை சுருட்டி கூழ் குடித்த அந்த நாள் நினைவுகள் அலைமோதும் ஓசை

முல்லை கடலின் முழு ஓசை கேட்டு
முழுநிலா பாத்திட ஆசை
முற்றத்து மண்ணை அள்ளிக் கொட்டி அடிக்கும் அந்த வாடைகாற்றின் ஓசை மனமதில்
அலை பாயுதே!

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan