” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_123

“ஆறு மனமே”
தாய்க்கு தாயாக இருந்து எம்மை வளத்தவள் அக்கா
அவள் அரவணைப்பில் ஆயிரம் அர்த்தங்கள்
அம்மாவுக்கு
நிகராய்
எம் சுமைகளை சுமந்தவள்
சுகம் தந்தவள்

தோழுக்கு தோள் கொடுத்தவள் தோழியாய் தோழில் எமை சுமந்தவள்
சுவையாய் உணவை சமைத்து தந்தவள்
உள்ளத்தில் உணர்விலும் நின்றவள் அக்கா ஆறுமா மனம் ஆறுமோ

செல்லும் இடம் எல்லாம் எம்மை அழைத்து செல்வாள் பார்ப்பவர் கண் கூடபட்டு போகும்
அன்றும் இன்றும் தாயாக எமை அணைக்கின்றாள் ஆறுது மனமே!

அத்தனை சமையலையும் தானே சமைத்தாள் அக்கா
உடன் பிறப்புக்களை இருக்க வைத்து உணவு பரிமாறினாள் அவளின் முகத்தில் புன்னகை பூக்களாய் மலர்ந்தது
முழு நிலா போல் பிரகாசித்து நின்றாள்
அந்த ஒளியில் நாமும் படுத்து உறங்கினோம் சேர்ந்து மனிதன் வாழும் வகையில் ஆறிடும் மனம் ஆறிடும்
விடுமுறையை அனுபவித்து மனம் ஆறி வந்தோம்
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan