நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_124

“மாவீரரே”
வெண்குருதி சிந்தி
செங்குருதியில் நனைந்த மாவீரர்களே
செய் அல்லது செத்துமடி என்ற
நெப்போலியன் கூற்றை கூறு போட்டவர்களே

எறிகணையில் எரிமலையாய் வெடித்தீர்கள்
எறிகணையில் விழுப்புண் அடைந்தீர்கள் பாதிவழி கடந்த போது சாவுமணி அடித்த
எம் தோழர்களே தோழிகளே

மீண்டு பிழைத்தால்
எம் தேசத்தை பார்ப்பனா என்ற கனவோடு
உயிர் நீத்த உத்தமர்களே

கல்லறைகள் கதைபேசும்
காவியங்கள் உருவாகும் என எண்ணிய காக்கை வன்னியன் கூட்டம்
காவு கொண்டது
கல்லறைகளை மட்டுமா காவியநாயகர்களை
அழித்தது ஒழித்தது!!
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading