” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி வாரம்__129
01.12.23

“கலவரம்”
எண்பத்தி மூன்று கலவரம்
வாள் நோக்கும்
வள்ளுவர்
நிலை குலைந்திருக்கும்
ஔவையார்
கலவரம் வெடித்ததை
புத்தகத்தில்
பாத்த
நினைவு இன்னும்!

நூல்நிலையம் அழிப்பு
குட்டிமணி தங்கத்துரை
சிறைச்சாலையில்
வதைப்பு சிதைப்பு

அடிக்க அடிக்க
ஓடிய சிங்கள தேசம்
அயல் நாட்டவரை
கை உதவிக்கு
கை கோத்து
காக்கை வன்னியன் கூட்டம் காட்டி கொடுக்க
எம் இனத்தை சிதைத்ததே
அழித்தே!

தியாக தீபம்
திலிபன்
அகிம்சை வழியில் சொன்ன செய்தி
அன்று மக்களுக்காக புலிகள்
இன்று மக்களோடு புலிகள் நாளை மக்களே புலிகள்!

2009 மௌனித்த
மாவீரர் தினம்
2023 சூடு பிடித்ததே
சூட்டை கிளப்பியதே
தமிழினத்தின்
உணர்வு கொந்தளிப்பு
கோலாகலம்
கோலமிட்ட
மாவீரர் நாள்

அடங்கி கிடப்பதும்
அழகல்ல
அழுகுரல் கேட்பதும் சகிப்பல்ல
அகிம்சை வழியில் போராடி
கலவரத்தை
காலத்தில்
காலாவதி செய்திடுவோம்!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan