” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி வாரம் _131

நிலாவில் உலா

தேய்பிறையில் தேய்ந்து
வளர் நதியாய் வளர்ந்து
வானத்து தாரகையாய்
வான்பரப்பில் நிக்கும்
நிலவே !

உன் ஒளி இன்றேல் நாமேது
உன் ஒளிக்கு
இடாய் கண்டது ஏது
பாருக்கு பட்டொளி கொடுக்கும் மதியே!

இரவில் அரன்மனை கட்டி
காக்கும் காவலனுக்கு
ஒரு நாள் விடுமுறை
அமாவாசை
ஒரு நாள் ஒளிமுகமாய்
பௌணமி!

நித்தம் பௌணமி
நிலவு போல்
பாத்திருக்க ஆசை
உன்னருகில்
நானிருக்க பக்கம் வந்தால்
சுட்டெரித்து விடுவாய் பால் நிலவே!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan