நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் 137

“பிள்ளை கனி அமுது”

என் கைக்குள்
நீ வந்தபோது
தாய் என்கின்ற
புது உணர்வு
என்னுள் துளிர்த்தது!

எத்தனை துன்பம் வந்தாலும்
குழந்தை கனியின் சிரிப்பில்
உள்ளம் மகிழ்ந்திடும்

அர்த்தம் புரியாத
மொழி பேசி
தத்தி நடந்து விழுந்து அழுது
சிரிப்பில் அன்பை பொழிந்து

தாலாட்டில் மயங்கி தூங்கி
பிடிவாத குணம் கொண்டு
குறும்புகள்
பல செய்த
பிள்ளை கனி
அமுது
முக்கனிகள்
எக்கனிகள்

அன்பை பகிர
அறிவுரை பேச
ஆலோசனை பெற
பண்போடு பக்குவப்படும் பலம் தரும் பாலம் பிள்ளைக்கனி!
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan