சிவா சிவதர்சன்

வாரம் 182
“முன்னறி தெய்வம்”

அம்மையும் அப்பனும் முன்னறி தெய்வம்
ஆன்றோர் உரைத்த கண் கண்ட தெய்வம்.
சித்திரா பெளர்ணமியன்று ஒளி வீசும் அன்னை
ஆடி அமாவாசையன்று அருவுருவமாய் தெரிவும் தந்தை.

இருக்கும் வரை எமக்காக வாழ்ந்த அன்னையும் தந்தையும்
அன்பினில் உயர்ந்து நின்ற அன்னையும் அறிவினால் தீபமேற்றிய தந்தையும்.
இன்றிவர் இலனென்று போயின் மறப்பவர் மனிதரா.?
கண்முன்னே உலாவிய தெய்வங்கள் போற்றிப்பணிதல் எங்கடன்.
தாயிற்சிறந்த கோவிலுமில்லை,
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
எமக்காய் வாழ்ந்து, எமக்காய் மடிந்தவர்கள்.
நாளும் மறக்கொணாத் தெய்வங்கள்
ஆண்டுக்கொருமுறையாவது
இவர்களை நினைத்து
எமது நன்றியை நிலைநாட்டுவோம்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading