” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 182
“முன்னறி தெய்வம்”

அம்மையும் அப்பனும் முன்னறி தெய்வம்
ஆன்றோர் உரைத்த கண் கண்ட தெய்வம்.
சித்திரா பெளர்ணமியன்று ஒளி வீசும் அன்னை
ஆடி அமாவாசையன்று அருவுருவமாய் தெரிவும் தந்தை.

இருக்கும் வரை எமக்காக வாழ்ந்த அன்னையும் தந்தையும்
அன்பினில் உயர்ந்து நின்ற அன்னையும் அறிவினால் தீபமேற்றிய தந்தையும்.
இன்றிவர் இலனென்று போயின் மறப்பவர் மனிதரா.?
கண்முன்னே உலாவிய தெய்வங்கள் போற்றிப்பணிதல் எங்கடன்.
தாயிற்சிறந்த கோவிலுமில்லை,
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
எமக்காய் வாழ்ந்து, எமக்காய் மடிந்தவர்கள்.
நாளும் மறக்கொணாத் தெய்வங்கள்
ஆண்டுக்கொருமுறையாவது
இவர்களை நினைத்து
எமது நன்றியை நிலைநாட்டுவோம்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan