பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 234 ]
“தலைப்பூ”

கார் குழல் அழகு பெண்மையின் சிறப்பு
மேலும் அழகூட்டும் அவள் சூடும் தலைப்பூ
பூவை விரும்பா பூவையரும் பூவுலகில் உண்டா?
தமிழ்ப்பெண்ணாய் இனங்காட்டுதும் அவள் சூடிய தலைப்பூ

மஞ்ள் பூசி நீராடி தலைப்பூவும் சூடி உலாவரும்
கன்னியின் அழகில் லட்சுமி கடாட்சம் ஒளி வீசும்
தலைவாரி பூச்சூடி பெண்ணைப்பள்ளிக்கு அனுப்பியபோது
பாரதியே கண்டு மகிழ்ந்து பாடல் புனைந்தது உண்டு

தலைவிரி கோலமாய் திரியும் பெண்களின் அலட்சியம்
கைவிரி கோலத்தை ஒருநாள் வழங்குதல் நிட்சயம்
பூவோடும் பொட்டோடும் வாழ விரும்பும் பெண்ணின் இலட்சியம்
சுமங்கலியாய் வாழ வைத்தது அவள் செய்த முற்பிறவிப்புண்ணியம்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்

Nada Mohan
Author: Nada Mohan