” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 238

“மீண்டெழு”

விழுந்தாலும் மீண்டெழுந்து போராடும் உறுதியான கொள்கை
எழுந்து போராடி வெற்றிகாணும் இலட்சியவாழ்க்கை
தோன்றி மறையும் ஓயாதகடல் அலைகளின்தன்மை
மீண்டெழுந்து போராடி வெற்றிபெறும் நம்பிக்கை

ஆண்டாண்டு காலம் நாம்கண்ட துயர்படிந்த பெண்ணடிமை
விண்டுடமுடியா அவலமதில் வீறுகொண்டெழுந்த பெண்மை
எண்ணில்லாத்துறைகள் இன்று பெண்ணில்லாத்துறை ஏதுமில்லை
மண்ணிலின்று போராடி மீண்டெழுந்த மென்மையான பெண்மையின் பெருமை
விழும்போது தூக்குபவர் எல்லாம் எழும்போது தாங்கவருவதில்லை
முழுமையான இனவாதங்கண்டும் உதவும் கரங்கள் முழுமனதோடு நீளுவதில்லை
இறப்பதற்கு உயிரின்றி வேறொன்று இல்லாத மக்களின் அவலநிலை
இணைந்துபோராடி மீண்டெழ இனவாதச்சட்டங்களும் இடமளிப்பதில்லை
குமுறும் எரிமலையும் பொறுமையிழந்து ஒருநாள் வெடித்துச்சிதறுவது போல
மக்கள் புரட்சியும் ஒருநாள் வெடித்தே தீரும்
அடிமைவிலங்கும் உடையும் சுதந்திர ஒளி தெரியும்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan