” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 248 ]
“வசந்தத்தில் ஓர் நாள்”

வருடமொருமுறை வந்துபோகும் பருவகாலம் வசந்தம்
மானுட வாழ்விலும் இளமைக்காலம் ஒரு வசந்தம்
இரண்டுமிணைந்தது வசந்தகாலக்கோலங்கள்
எதிர்கால வாழ்வையே உருவாக்கும் கோலங்கள்

பறவைகள் போல் சுதந்திரமாய் பறந்து திரிந்தகாலம்
எதற்கும் துணிந்த இன்பமானதொரு பொற்காலம்
மணம் வீசும் மலர்களின் வாசம் காவிவரும் தென்றல்
கருத்தொருமித்த உள்ளங்கள் வெளிப்படுத்தும் காதல்

நாளொருவண்ணமாய் வளர்ந்தகாதல் சோடைபோகுமா?
காதலை வளர்த்து கடிமணம்புரிய உதவும் பலர் இந்நாளில்
மோதலை வளர்த்து இணைதலைத்தடுக்கும் வீணர் சிலர் திரைமறைவில்
வசந்தத்தில் ஓர்நாள் தொடங்கிய காதல் கருகிப்போனால் இதயம்தாங்குமா?

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்

Nada Mohan
Author: Nada Mohan