சிவா சிவதர்சன்

[ வாரம் 262 ]
“நேரம்”

நேரம் பொன்னானது என்றே நெஞ்சினில் கொள்வாய் தோழா!
கறந்தபால் மடியில்ஏறுமா? இறந்தகாலம்நிகழ்காலமாகுமா தோழா?
காலமறிந்து முயற்சித்தால் வெற்றிநிச்சயம் தோழா!
இன்று செய்யவதை இன்றே,அதையும் நன்றே செய்வாய் தோழா!

நேரத்தை பின்போட்டு நாளை யென்றால் சோம்பல் உன்னை வென்றுவிடும்
நல்லநாள் தேடி இன்றையநாளைப்பழிபோடாதே
நாளும் கோளும் நன்மையே தருமென அறிவாய்
பிறர்க்குதவ என்றும் சித்தமாக நேரத்தை ஒதுக்குவாய்

தக்கநேரஉதவி,ஞாலத்தில் மாணப்பெரிதாம்
உடன்கிடைக்காத நீதியும் மறுக்கப்பட்ட நீதியாம்
நேரத்தை வீண்விரயஞ் செய்யாத மேதைகளை உலகறிவார்
மனிதராய் இறைவன் எமைப்படைத்த நேரம்

மனிதருள்ளும் மனம் ஒன்றை உருவாக்கிய நேரம்
பிறக்கும்நேரம் எல்லோரும் நல்லவராய் பிறந்தார்
வளரும்போது தீயவராய் மாறுவது சூழல் வாய்த்த நேரம்
அவமாய் நேரவிரயமும்சுயமாய்நேரந்தவறாமையும் உலகால் போற்றப்படும்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading