தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சிவா சிவதர்ஷன்

[ வாரம் 215 ]
“விடியல்”

இயற்கை காட்டும் வழியில் வாழும் உயிர்கள் யாவும்
இயல்பாய் அவற்றின் பொழுதும் இடையூறின்றி விடிந்து விடும் இறைவன்படைப்பாம் மனிதன் மட்டும் விடிதலின்றித் தவித்து நிற்கும்
இடையறாத ஆசைகளின் தாக்கம் அவனின் விடியலுக்கு தடையாய் அமைந்து விடும்.

ஐந்தறிவு உயிரினங்கள் என்றும் விடியலை நாடி அலைவதில்லை
ஆறறிவு மனிதன் மட்டும் ஆசையெனும் துன்பத்தை அறுக்கத் துணிவதில்லை
ஆறாம் அறிவிருந்தும் ஆராய்ந்து பார்த்திருந்தால் விடியல் வெகு தூரமில்லை
அடுத்தவரின் வெற்றியின் இரகசியத்தை அறிந்து கொள்ள ஆர்வமும் காட்டவில்லை

அடுத்தவரின் ஆக்கினைக்கு ஆட்பட்டாய்
அறிந்திருந்தும் முரண்படாது மௌனம் காத்தாய்
எழுந்து நின்று போராட தவறிவிட்டாய்
உனக்கென விடியலென்று ஒன்றுமில்லை உன்னை நீயே மாற்றிக்கெள்வாய்

நன்றி வணக்கம்

சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

    Continue reading