திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

சிவா சிவதர்ஷன்

[ வாரம் 215 ]
“விடியல்”

இயற்கை காட்டும் வழியில் வாழும் உயிர்கள் யாவும்
இயல்பாய் அவற்றின் பொழுதும் இடையூறின்றி விடிந்து விடும் இறைவன்படைப்பாம் மனிதன் மட்டும் விடிதலின்றித் தவித்து நிற்கும்
இடையறாத ஆசைகளின் தாக்கம் அவனின் விடியலுக்கு தடையாய் அமைந்து விடும்.

ஐந்தறிவு உயிரினங்கள் என்றும் விடியலை நாடி அலைவதில்லை
ஆறறிவு மனிதன் மட்டும் ஆசையெனும் துன்பத்தை அறுக்கத் துணிவதில்லை
ஆறாம் அறிவிருந்தும் ஆராய்ந்து பார்த்திருந்தால் விடியல் வெகு தூரமில்லை
அடுத்தவரின் வெற்றியின் இரகசியத்தை அறிந்து கொள்ள ஆர்வமும் காட்டவில்லை

அடுத்தவரின் ஆக்கினைக்கு ஆட்பட்டாய்
அறிந்திருந்தும் முரண்படாது மௌனம் காத்தாய்
எழுந்து நின்று போராட தவறிவிட்டாய்
உனக்கென விடியலென்று ஒன்றுமில்லை உன்னை நீயே மாற்றிக்கெள்வாய்

நன்றி வணக்கம்

சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading