முயற்சியே பலம் முனைப்பே திடம்

செல்வி நித்தியானந்தன் முயற்சியே பலம் முனைப்பே திடம் மானிட பிறப்பின் மகத்தான பலமே மனஉறுதி என்றுமே திடமான முனைப்பே முயற்சியின் பயனே முற்றிலும்...

Continue reading

பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

சிவா சிவதர்ஷன்

[ வாரம் 215 ]
“விடியல்”

இயற்கை காட்டும் வழியில் வாழும் உயிர்கள் யாவும்
இயல்பாய் அவற்றின் பொழுதும் இடையூறின்றி விடிந்து விடும் இறைவன்படைப்பாம் மனிதன் மட்டும் விடிதலின்றித் தவித்து நிற்கும்
இடையறாத ஆசைகளின் தாக்கம் அவனின் விடியலுக்கு தடையாய் அமைந்து விடும்.

ஐந்தறிவு உயிரினங்கள் என்றும் விடியலை நாடி அலைவதில்லை
ஆறறிவு மனிதன் மட்டும் ஆசையெனும் துன்பத்தை அறுக்கத் துணிவதில்லை
ஆறாம் அறிவிருந்தும் ஆராய்ந்து பார்த்திருந்தால் விடியல் வெகு தூரமில்லை
அடுத்தவரின் வெற்றியின் இரகசியத்தை அறிந்து கொள்ள ஆர்வமும் காட்டவில்லை

அடுத்தவரின் ஆக்கினைக்கு ஆட்பட்டாய்
அறிந்திருந்தும் முரண்படாது மௌனம் காத்தாய்
எழுந்து நின்று போராட தவறிவிட்டாய்
உனக்கென விடியலென்று ஒன்றுமில்லை உன்னை நீயே மாற்றிக்கெள்வாய்

நன்றி வணக்கம்

சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan