மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

சிவா சிவதர்ஷன்

[ வாரம் 215 ]
“விடியல்”

இயற்கை காட்டும் வழியில் வாழும் உயிர்கள் யாவும்
இயல்பாய் அவற்றின் பொழுதும் இடையூறின்றி விடிந்து விடும் இறைவன்படைப்பாம் மனிதன் மட்டும் விடிதலின்றித் தவித்து நிற்கும்
இடையறாத ஆசைகளின் தாக்கம் அவனின் விடியலுக்கு தடையாய் அமைந்து விடும்.

ஐந்தறிவு உயிரினங்கள் என்றும் விடியலை நாடி அலைவதில்லை
ஆறறிவு மனிதன் மட்டும் ஆசையெனும் துன்பத்தை அறுக்கத் துணிவதில்லை
ஆறாம் அறிவிருந்தும் ஆராய்ந்து பார்த்திருந்தால் விடியல் வெகு தூரமில்லை
அடுத்தவரின் வெற்றியின் இரகசியத்தை அறிந்து கொள்ள ஆர்வமும் காட்டவில்லை

அடுத்தவரின் ஆக்கினைக்கு ஆட்பட்டாய்
அறிந்திருந்தும் முரண்படாது மௌனம் காத்தாய்
எழுந்து நின்று போராட தவறிவிட்டாய்
உனக்கென விடியலென்று ஒன்றுமில்லை உன்னை நீயே மாற்றிக்கெள்வாய்

நன்றி வணக்கம்

சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading