மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

சுனாமியின் வடுக்கள்

ரஜனி அன்ரன்

“ சுனாமியின் வடுக்கள் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 26.12.2024

ஆழ்கடலின் அடியில் பூகம்பம்
அவனியே நடுக்கம்
ஆழிப்பேரலையாய் ஊழித் தாண்டவம்
அரக்கனாய் வீடுவரை சென்று
இரக்கமின்றியே உடலங்களை இழுத்துச் சென்று
ஆத்மாக்களை ஆழியில் கரைத்து
தீராப்பசி தீர்த்து ஏப்பம் விட்ட
துயரநாள் மார்கழித் திங்கள் இருபத்தியாறு !

அழித்துச் சென்ற தடங்கள்
அள்ளிச் சென்ற உடலங்கள் எத்தனை எத்தனை
அத்தனையும் ஆறாத் துயரங்கள்
வளம் சிறக்க வழிகோலி
இனம் சிறக்க படகேற்றி
தினம் தினம் மடியிலே சுமந்த கடலம்மா
சினம் கொண்டு அள்ளிச் சென்றாயோ
மார்கழித் திங்கள் இருபத்தியாறினிலே !

இறந்த உயிர்களுக்கு
இரங்கலைத் தவிர வேறெதுவுமில்லை
இதுபோல அனர்த்தங்கள்
இனிமேலும் வேண்டாமே
இருபது வருடங்கள் கடந்த போதும்
இன்றும் வழிகிறதே எம் விழியோரம்
புதிய கனவுகள் பூக்கட்டும் புத்துணர்வும் பிறக்கட்டும் !

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading