29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
சுனாமியின் வடுக்கள்
ரஜனி அன்ரன்
“ சுனாமியின் வடுக்கள் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 26.12.2024
ஆழ்கடலின் அடியில் பூகம்பம்
அவனியே நடுக்கம்
ஆழிப்பேரலையாய் ஊழித் தாண்டவம்
அரக்கனாய் வீடுவரை சென்று
இரக்கமின்றியே உடலங்களை இழுத்துச் சென்று
ஆத்மாக்களை ஆழியில் கரைத்து
தீராப்பசி தீர்த்து ஏப்பம் விட்ட
துயரநாள் மார்கழித் திங்கள் இருபத்தியாறு !
அழித்துச் சென்ற தடங்கள்
அள்ளிச் சென்ற உடலங்கள் எத்தனை எத்தனை
அத்தனையும் ஆறாத் துயரங்கள்
வளம் சிறக்க வழிகோலி
இனம் சிறக்க படகேற்றி
தினம் தினம் மடியிலே சுமந்த கடலம்மா
சினம் கொண்டு அள்ளிச் சென்றாயோ
மார்கழித் திங்கள் இருபத்தியாறினிலே !
இறந்த உயிர்களுக்கு
இரங்கலைத் தவிர வேறெதுவுமில்லை
இதுபோல அனர்த்தங்கள்
இனிமேலும் வேண்டாமே
இருபது வருடங்கள் கடந்த போதும்
இன்றும் வழிகிறதே எம் விழியோரம்
புதிய கனவுகள் பூக்கட்டும் புத்துணர்வும் பிறக்கட்டும் !

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...