நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சுமித்ரா தேவி

கவிதை இலக்கம்04
மகள்
அழகின் குரலாய்
ஒலிக்கும் அழகே
அந்திவான நிலவே
ஆடி அசையும் பதுமையே
இதயம் கவரும்
இன்னிசை மழையே
கவிதை ஊற்றான
கள்ளச்சிரிப்பே
தேனாய் தித்திக்கும்
தேவாமிர்தமே
தெவிட்டா அழகின்
எட்டாக் கனியே
துள்ளி குதிக்கும்
புள்ளி மானே
துயிலும் போதும் சிரித்த முகமே
கன்ன சிவப்பில்
காண்போர் மயங்க
வழியெங்கும் உவமை தேடி
வழியின்றி தவிக்கின்றேன்
உன் அழகை கவி எழுத
சுமித்ரா தேவி
இலங்கை (கொழும்பு)

Nada Mohan
Author: Nada Mohan