செல்வி நித்தியானந்தன்.

பங்குனி
தமிழ் மாத இறுதியாய்
தமிழ் கடவுளின் சிறப்பாய்
திருமண பந்த நிகழ்வாய்
தரணியிலே வருவாய் அழகாய்

அசுரரின் முக்குணத்தை அழித்தாய்
முருகக்கடவுளாய் ஞானம் பெற்றாய்
தேவர்குலத்தை போரிட்டு காத்தாய்
தெய்வானையை மணந்தாய் உத்தரமாய்

பங்குனி மங்களத்தின் நாளாய்
பலருக்கு வாழ்வின் மகிழ்வாய்
பாங்காக வருவாய் வரவாய்
பங்கு நீயாய் பங்குனி நீயாய்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading