சொந்தங்களின் தவிப்பு

ரஜனி அன்ரன்

“ சொந்தங்களின் தவிப்பு “ ….கவி….ரஜனி அன்ரன் (B.A) 29.08.2024

கண்களும் தான் தேட
கண்ணீரும் வழிந்தோட
காலங்களும் உருண்டோட
காணாமற் போனோர் கதை
கானல்நீராகி கனவாகத் தான் போச்சு
தொலைந்து போன சொந்தங்கள்
சொந்தங்களின் தவிப்புக்கள்
சொல்லி மாள முடியவில்லை !

உறவுகளைத் தொலைத்த சொந்தங்களின் தேடல்
உணர்வோடு தொடர்கிறதே இன்னமும்
கேள்விகள் பலவாக மனதில் எழவும்
பதிலே இல்லாமல் காலங்கள் கழியவும்
நினைவுகள் மாறாமல்
தேடல்களும் தொடர்கிறதே
ஆண்டுகள் பதினைந்தாக தவிப்போடு !

கடந்தகாலம் கடந்துவிட
நிகழ்காலம் கேள்விக்குறியோடு நகர
எதிர்காலமோ ஏக்கத் தவிப்போடு
சொந்தங்களின் தவிப்பும் தொடர
சோகங்கள் மனதை நெருட
காயங்கள் வடுவாக காலங்களும் ஓடிவிட
நிழலாகத் தொடர்கிறதே நினைவுகளும்
காணாமற் போன சொந்தங்களின் தவிப்பாக !

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading