28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சொந்தங்களின் தவிப்பு
ரஜனி அன்ரன்
“ சொந்தங்களின் தவிப்பு “ ….கவி….ரஜனி அன்ரன் (B.A) 29.08.2024
கண்களும் தான் தேட
கண்ணீரும் வழிந்தோட
காலங்களும் உருண்டோட
காணாமற் போனோர் கதை
கானல்நீராகி கனவாகத் தான் போச்சு
தொலைந்து போன சொந்தங்கள்
சொந்தங்களின் தவிப்புக்கள்
சொல்லி மாள முடியவில்லை !
உறவுகளைத் தொலைத்த சொந்தங்களின் தேடல்
உணர்வோடு தொடர்கிறதே இன்னமும்
கேள்விகள் பலவாக மனதில் எழவும்
பதிலே இல்லாமல் காலங்கள் கழியவும்
நினைவுகள் மாறாமல்
தேடல்களும் தொடர்கிறதே
ஆண்டுகள் பதினைந்தாக தவிப்போடு !
கடந்தகாலம் கடந்துவிட
நிகழ்காலம் கேள்விக்குறியோடு நகர
எதிர்காலமோ ஏக்கத் தவிப்போடு
சொந்தங்களின் தவிப்பும் தொடர
சோகங்கள் மனதை நெருட
காயங்கள் வடுவாக காலங்களும் ஓடிவிட
நிழலாகத் தொடர்கிறதே நினைவுகளும்
காணாமற் போன சொந்தங்களின் தவிப்பாக !
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...