” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சொந்தங்களின் தவிப்பு

ரஜனி அன்ரன்

“ சொந்தங்களின் தவிப்பு “ ….கவி….ரஜனி அன்ரன் (B.A) 29.08.2024

கண்களும் தான் தேட
கண்ணீரும் வழிந்தோட
காலங்களும் உருண்டோட
காணாமற் போனோர் கதை
கானல்நீராகி கனவாகத் தான் போச்சு
தொலைந்து போன சொந்தங்கள்
சொந்தங்களின் தவிப்புக்கள்
சொல்லி மாள முடியவில்லை !

உறவுகளைத் தொலைத்த சொந்தங்களின் தேடல்
உணர்வோடு தொடர்கிறதே இன்னமும்
கேள்விகள் பலவாக மனதில் எழவும்
பதிலே இல்லாமல் காலங்கள் கழியவும்
நினைவுகள் மாறாமல்
தேடல்களும் தொடர்கிறதே
ஆண்டுகள் பதினைந்தாக தவிப்போடு !

கடந்தகாலம் கடந்துவிட
நிகழ்காலம் கேள்விக்குறியோடு நகர
எதிர்காலமோ ஏக்கத் தவிப்போடு
சொந்தங்களின் தவிப்பும் தொடர
சோகங்கள் மனதை நெருட
காயங்கள் வடுவாக காலங்களும் ஓடிவிட
நிழலாகத் தொடர்கிறதே நினைவுகளும்
காணாமற் போன சொந்தங்களின் தவிப்பாக !

Nada Mohan
Author: Nada Mohan