இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ஜதுர்ஷிகா விஜயகுமார்

கண் அழகி நீயே பெண்ணே
****~~~~~****~~~~~****~~~~~

தெளிந்து ஓடும் நீரிலே
தத்தி நீந்தும்
சிறு மீனை
போல,

உன் அழகு
முகத்திலே நீ
சிமிட்டும் உன்
கண்ணை பார்.

வானம் சூழ்ந்து
நிற்கும்
கார் மேகம்
போல,

அந்த கருவிழி
கண்ணினாலே
என்னை முழுதாய்
சூழ்ந்து கவர்ந்தவளே

இந்த ஒரு
ஜென்மம் போதும்
உன் கண்ணழகை
இரசிக்க மட்டும்

என்ன மாயம்
செய்தாயோ நீ
ஏனோ தெரிய வில்லை,

உன் கண்ணை
மட்டுமே தேடுகிறது
என் கண்கள்.

நீ புருவம்
தூக்கி கோபித்தாலும்
இன்னும் உன்
அழகு கூடுதே.

பெண்ணே உன்
கண் அழகின்
ரகசியம் எதுவென
எனக்கு சொல்வாயா?

*********
ஜதுர்ஷிகா விஜயகுமார்
முல்லைத்தீவு உடுப்புக்குளம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading