முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில்...

Continue reading

மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ஜதுர்ஷிகா விஜயகுமார்

கண் அழகி நீயே பெண்ணே
****~~~~~****~~~~~****~~~~~

தெளிந்து ஓடும் நீரிலே
தத்தி நீந்தும்
சிறு மீனை
போல,

உன் அழகு
முகத்திலே நீ
சிமிட்டும் உன்
கண்ணை பார்.

வானம் சூழ்ந்து
நிற்கும்
கார் மேகம்
போல,

அந்த கருவிழி
கண்ணினாலே
என்னை முழுதாய்
சூழ்ந்து கவர்ந்தவளே

இந்த ஒரு
ஜென்மம் போதும்
உன் கண்ணழகை
இரசிக்க மட்டும்

என்ன மாயம்
செய்தாயோ நீ
ஏனோ தெரிய வில்லை,

உன் கண்ணை
மட்டுமே தேடுகிறது
என் கண்கள்.

நீ புருவம்
தூக்கி கோபித்தாலும்
இன்னும் உன்
அழகு கூடுதே.

பெண்ணே உன்
கண் அழகின்
ரகசியம் எதுவென
எனக்கு சொல்வாயா?

*********
ஜதுர்ஷிகா விஜயகுமார்
முல்லைத்தீவு உடுப்புக்குளம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading