ஜமுனாமலர் இந்திரகுமார்

விடியல்
இரவு பகலாக
இருளும் ஒளியாக
காதல் கனிவாக
கன்னி தாயாக
மழலை வரமாக
மௌனம் மொழியாக
சொல்லும் கவியாக
நெல்லும் கதிராக
கல்லும் சிலையாக
இலையும் சருகாக
காடும் வீடாக
பாலை சோலையாக
மாரி கோடையாக
அழுகை சிரிப்பாக
கனவு நனவாக
மௌனம் மொழியாக
மொழியும் தொடர்பாட
மாறும் மாற்றத்தில்
விடியல் காண்கிறது
வாழ்வியல் வட்டம்

ஜமுனாமலர் இந்திரகுமார்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading