” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெபா தெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-20

24-10-2023

ஆறு மனமே ஆறு

நிலையென நினைத்த சந்தோஷம் நிர்கதியாகி நிமிடத்தில் தொலைந்ததும்
நித்தமும் தேடும் எவையும் உலையில்ப் போடமுன் விலையைக் கண்டு துடிப்பதும்
மலை போல சில அழுத்தம் மனதை நெருடுவதும்,
உருளும் வண்டியின் சக்கரம் போல் ஒரு நாள் உருண்டோடி விடும்.

விஞ்ஞானம் படித்து மகன் விஞ்ஞானி ஆவான் என்றும்
தமிழைப் படித்து இவன் தாய் மண்ணை காப்பான் என்றும் கனவு கண்டால்..
தஸ் புஸ் எனப் பிறமொழியைப் படித்ததும் இன்றி, இவன் கணனியில காலத்தை வீணாகக் கழிக்கிறானே!
கண்ட மனமே கலங்காம ஆறு நீ,
வெட்டாட்டத்தில் தாயம் போட்டு வெண்டவனும் உண்டு தானே!

இன்றைய வலிகளெல்லாம் நாளைய பலமேயாம்!
தோல்வி கண்டு துவண்டிடாமல், கடும் உழைப்போடு ஊதியமாக்கி
வீழ்ந்து எழும் நேரமெல்லாம் மனதில், வீரன் ஒருவன் அனலாய் பொறிந்து
எல்லா வெற்றியும் எம் கையில் ….
என்றெண்ணி ஆறு மனமே ஆறு!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan