பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-16

21-09-2023

தியாகமே தீர்ப்பானது

துள்ளித் திரிந்து தூங்கி
எழும் வயதினிலே
பள்ளிப் படிப்பிளந்து
தாய் மண்ணைத்
தான் காக்கவென

எல்லையை மறித்து
உயிர்நீத்த மாவிரரின்
தியாகமே தீர்ப்பானது
நியாயமற்றவரிடம்!

உண்ணா நோன்போடு
உயிர்நீத்த தியாகியும்
காற்றுப்புகா இடத்துல
கணையாய்ப் புகுந்த காவலரும்
தியாகமே தீர்ப்பானாலும்…

இனத்திற்காய் வாழ்ந்தோர்கள் இதயத்தால் வணங்கிடுவோம்
இவர்கள் தியாகத்திற்காய்
யாம் செய்வோம் யாகம்!

தியாகங்கள் தீர்ப்பாகலாம்
உலகில்
நியாயங்கள் திரும்பலாம்
விரைவில்
நாங்களும் பார்க்கலாம்
நிஜத்தில்
எதுவும் நடக்கலாம்
புலத்தில்!

நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan