” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-21

14-11-2023

நீரழிவு

தொப்பை பெருக
கரும் புள்ளி வளர
முகச் சுருக்கம் குறைய
திடீர் பளபளப்பு காண

கொழுப்புத் தாடையில தங்க
பணக்காரப் பயலா? நினைக்க!
சிறு நடுக்கமும் மந்தமுமாய்
வந்து தங்குது நீரழிவு!

நீரழிவு வந்தாலே பேரழிவு
நிரந்தரமாய் நாற்காலி போடுது
பல நோய்க்கு வித்தாக மாறுது
அறு சுவையை அகற்ற வேண்டுது!

காடுகளை அழித்து
கைத்தொலைபேசியே
கதியான சமுதாயமே
பட படத்த உணவை உண்டு
பரம்பரை நோய் எண்ணாமல்

இச்சையோடு பச்சைக்
காய்கறி, பழம் உண்டு
மிச்சத்திற்கு சிறுதானியம்
நார்ச்சத்தும் கொண்டு
நடை பயிற்சியும் கண்டு வர

பணக்காரப் பரம்பரை
நீரழிவு பாதி வழியில்
பறந்து போக நம்
ஆயுளும் அதிகரிக்கும்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan