ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-30
02-04-2024

ஊக்கம் (சிறுமுயற்சி பாடல்)

நோக்கம் உனக்கு நிறைவேற
ஊக்கம் கொஞ்சம் வேண்டுமடா
ஏக்கம் கொண்டு உழைத்திட்டால்
எதிலும் வெற்றி உனக்கடா!

வேகமாய் நீ.. ஓடடா
வெற்றி நெருங்கி வருமடா
இலக்கை உயர்வாய் வைத்திடு
இதுவே வெற்றி தருமடா!

கணணியிலே விழிக்காதே
கண்ணுறங்கித் தூங்கிடு
இலட்சிய கனவில் நீயும் விழித்திடு
வாழ்க்கையும் அழகாகும்!

பிறக்கும்போது வெறும் கையுடன்
பிறந்து வந்து விட்டோம்
பெற்றதையிங்கு பகிர்ந்தளித்து
மகிழ்ச்சி நாமும் கொள்வோம்!

மகனே நீயும் புரிந்து கொள் -அம்மா
இங்கே கலங்குகின்றேன்
அனைவருக்கும் புகட்டிடு
இதுவே எந்தன் கனவடா…(நோக்கம்…)

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading