” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-30
02-04-2024

ஊக்கம் (சிறுமுயற்சி பாடல்)

நோக்கம் உனக்கு நிறைவேற
ஊக்கம் கொஞ்சம் வேண்டுமடா
ஏக்கம் கொண்டு உழைத்திட்டால்
எதிலும் வெற்றி உனக்கடா!

வேகமாய் நீ.. ஓடடா
வெற்றி நெருங்கி வருமடா
இலக்கை உயர்வாய் வைத்திடு
இதுவே வெற்றி தருமடா!

கணணியிலே விழிக்காதே
கண்ணுறங்கித் தூங்கிடு
இலட்சிய கனவில் நீயும் விழித்திடு
வாழ்க்கையும் அழகாகும்!

பிறக்கும்போது வெறும் கையுடன்
பிறந்து வந்து விட்டோம்
பெற்றதையிங்கு பகிர்ந்தளித்து
மகிழ்ச்சி நாமும் கொள்வோம்!

மகனே நீயும் புரிந்து கொள் -அம்மா
இங்கே கலங்குகின்றேன்
அனைவருக்கும் புகட்டிடு
இதுவே எந்தன் கனவடா…(நோக்கம்…)

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan