ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-49
29-10-2024

சலவை

துயரங்களை சலவை செய்வதில்லை
தூரமாயும் விட்டுவைப்பதில்லை
அழுக்கு மூட்டை போல
அகத்தினுள் பூட்டி வைப்பர்!

படிந்திருக்கும் கறையெல்லாம்
பக்தியால், பாசத்தால் அகற்றி
எரிக்கும் சூரியனில் உலரவிட்டு
எட்டி நாலடி நடந்து வர

விற்றமின் டி உடம்பில் வந்தேற
வீணான சஞ்சலமும் இறங்கிவிட
அழுக்குகளெல்லாம் நீக்கப்பட்டு
அமைதியான வாழ்வு பெற்று

பரபரப்பும் பதட்டமும் நீங்கி
பளபளப்பான சலவையென
தூய்மையை மனம் மெய்ச்சிடுமே
துயரமெல்லாம் பறந்தோடிடுமே!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan