” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-49
29-10-2024

சலவை

துயரங்களை சலவை செய்வதில்லை
தூரமாயும் விட்டுவைப்பதில்லை
அழுக்கு மூட்டை போல
அகத்தினுள் பூட்டி வைப்பர்!

படிந்திருக்கும் கறையெல்லாம்
பக்தியால், பாசத்தால் அகற்றி
எரிக்கும் சூரியனில் உலரவிட்டு
எட்டி நாலடி நடந்து வர

விற்றமின் டி உடம்பில் வந்தேற
வீணான சஞ்சலமும் இறங்கிவிட
அழுக்குகளெல்லாம் நீக்கப்பட்டு
அமைதியான வாழ்வு பெற்று

பரபரப்பும் பதட்டமும் நீங்கி
பளபளப்பான சலவையென
தூய்மையை மனம் மெய்ச்சிடுமே
துயரமெல்லாம் பறந்தோடிடுமே!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan