ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-55
10-12-2024

ஈரம்

நினைக்கின்ற நேரம்
நெஞ்சினிலே பாரம்
கண்ணருகே ஈரம்
கவிதைதனை வரைய

போட்ட சுரத்தில்
பாடலின் ராகத்தில்
கவலைகளும் தூரமாய்
கனவுகளும் ஓரமாய்

வாழ்க்கையே நரகமாய்
வாழ்ந்த வாரமெல்லாம்
தொலைந்தது தூரமாய்
தோழியவள் மாவீரரென!

காந்தள் மலரெடுத்து
கூப்பிய கரத்திலிட
கூச்சலிடுது அந்தநேர
ஞாபகமாய் பேரளிவு!

பேதை நினைவிலொரு
கடந்த கால சீரழிவு
காலநேரம் நெருங்கிவர .
கனவுகளும் ஒளிருமிங்கே.

மனங்களில் ஈரம்கசிய
பலரின் பாரமகற்றி
பாரியின் தேரைப்போல
எம் ஊராருடன் வாழ்வோமே.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading