28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-55
10-12-2024
ஈரம்
நினைக்கின்ற நேரம்
நெஞ்சினிலே பாரம்
கண்ணருகே ஈரம்
கவிதைதனை வரைய
போட்ட சுரத்தில்
பாடலின் ராகத்தில்
கவலைகளும் தூரமாய்
கனவுகளும் ஓரமாய்
வாழ்க்கையே நரகமாய்
வாழ்ந்த வாரமெல்லாம்
தொலைந்தது தூரமாய்
தோழியவள் மாவீரரென!
காந்தள் மலரெடுத்து
கூப்பிய கரத்திலிட
கூச்சலிடுது அந்தநேர
ஞாபகமாய் பேரளிவு!
பேதை நினைவிலொரு
கடந்த கால சீரழிவு
காலநேரம் நெருங்கிவர .
கனவுகளும் ஒளிருமிங்கே.
மனங்களில் ஈரம்கசிய
பலரின் பாரமகற்றி
பாரியின் தேரைப்போல
எம் ஊராருடன் வாழ்வோமே.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...