” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-57
07. 01 – 2024

பூக்கும் புத்தாண்டு

பூக்கும் புத்தாண்டே
புதுமை பொலிவுடனே
புலத்தில் நிம்மதியும்
பூகோளத்தில் அமைதியும்

கற்பனை சிறக்க
காவியம் படைக்க
காலடி வைக்க
கனவுகள் யொலிக்க

சோகங்கள் விட்டு
சொந்தங்கள் சேர்ந்து
சொல்பேச்சு கேட்டு
சொர்க்க பூமியாக்கி

பெற்றவரை மதித்து
பேராண்பை பூண்டு
பெண்ணடிமை தகர்த்து
பிறப்பில் பேதமற்று

மரங்களை நாட்டி
மற்றான் நலம்பேணி
மதவெறி அகற்றி
மனிதநேயம் காத்து

சுற்றாடல் பாதுகாத்து
சுகாதாரம் வளர்த்து
சுகமாக சுவாசித்து
சுறுசுறுப்பாய் வளர

புத்தாண்டே நீ
புலர்ந்து வா
புன்னகை மலராய்
பூக்கும் புத்தாண்டே.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan