ஜெயம் தங்கராஜா

சசிச

தலையீடு ( மூக்கு நுழைப்பு)

பிறரது வாழ்க்கைக்குள் மூக்கை நுழைக்காதே
அறத்திற்கு வையகத்தில் ஊறு இழைக்காதே
அவரவர் பாடுகள் போகின்றது நிறைவாக
சுவரைக்கட்டி பிரித்துவிட்டு மகழாதே மறைவாக

தேன்கூட்டை கலைத்துவிட பகீரதப் பிராயத்தனம்
ஏன் இந்த கேவலங்கெட்ட மனம்
மூன்றாம் மனிதர் சொல்கேட்பவர் பாவம்
தாண்டி வராதவரை கிடைப்பதெல்லாம் சாபம்

நன்மை செய்வதென்றே வலியவே உள்நுழைவார்
கண்ணைக் கட்டிவிட்டு குடும்பத்தைக் குலைப்பார்
தொட்டிலையும் ஆட்டிவிட்டு குழந்தையையும் கிள்ளிடுவார்
கட்டுக்கதைகளை கூறியே பாதாளத்தில் தள்ளிடுவார்.

ஜெயம்
24-07-2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading