பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

கவிஞனாய் பேரின்பம்

சந்தக் கவிகள் பாடிடச் சொல்லி
வந்து குதிக்குமே வார்த்தைகள் துள்ளி
சிந்திக் குவிந்திட்ட கருத்தினை அள்ளி
தந்திடும் மனமோ வைக்காதே தள்ளி

அழகான உணர்வதால் மனதிற்குள் கொண்டாட்டம்
மலர்களின் தேனதை உண்ணும் வண்டாட்டம்
பழகவே தமிழை தித்திக்கும் அமுதாட்டம்
அளவில்லா ஆனந்தம் திகட்டாது உற்சாகமூட்டும்

தொடர்ந்திட வேண்டும் அன்னையே பார்த்திடு
அடர்த்தியாய் அறிவினை இருக்கவே செய்திடு
இடர்பாடு வரினும் விரைந்தே தடுத்திடு
படர்ந்துமே பரவிட அருளைப் பொழிந்திடு

சருகென நினைத்ததைக் கூடவே இங்கு
மெருகேற்றிக் காட்டுவேன் கவியாக்கி அங்கு
கருவொன்று கிடைத்திட்டால் படைக்காது எங்கு
உருவாக்கி மகிழ்வதே கவிஞனின் பங்கு

ஜெயம்
24-09-2023

Nada Mohan
Author: Nada Mohan