” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 700

விலாசத்திற்கு சொந்தக்காரன் நான் மட்டுமல்ல

மகிழ்ச்சி வடிவெடுத்து அரங்கேறிய நிகழ்ச்சியாக
அர்த்தங்களை காவி கணங்கள் சொட்டிக்கொண்டன
வாழ்த்தும் வார்த்தைகளை அகப்படுத்தியது அகம்
உறவுகளின் உன்னதங்களுக்குள் உருகிக்கொண்ட வேளையது

சந்தோச மிகுதியால் உள்ளம் தத்தளித்தது
செவிகளையுரசிய பாராட்டுக்கள் சுகங்களை பிரசவித்தன
இன்பம் பொழுதை ஆக்கிக் கொண்டாடியது
நம்ப முடியவில்லை கனவொன்று நிஜமானது

கொட்டிக் குவித்த கற்பனைகள் அற்புதமானது
சிந்தித்து வரைந்த வரிகளும் தத்துவமானது
எழுதிய பாக்களால் கவிஞனெனும் முகவரி
பிறவிப் பயனை அடைந்ததாக மனத்திருப்தி

பேரன்பு கொண்டவர்களுடனான பூலோகப் பயணம்
தாயும் சேயும்போல நிறைவாகியது சொந்தம்
இரசிப்பவர் மத்தியில் வாழ்தலே அருள்
அவ்வரத்தைப் பெற்றேன் இதுவே வாழ்க்கையானது

ஜெயம்
16-11-2023

Nada Mohan
Author: Nada Mohan